siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 30 மே, 2023

இவ்வருடத்தில் ஜெர்மனியிலுள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

ஜெர்மனி நாட்டில் மாணவர்களுக்கு 200 யுரோ வவுச்சர் வழங்கப்பட இருக்கின்றது. ஜெர்மனிய அரசாங்கமானது கொரோனா காலங்களில் இளைஞர் யுவதிகள் பலர் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
அதன் காரணத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வருடத்தில் ஒரு 200 யுரோ வவுச்சரை வழங்குவதற்கு தீர்மானித்து இருந்தது.
அதன்படி இந்த வவுச்சர் 1.6.2023 இல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.அதாவது இந்த புதிய நடைமுறை மூலம் 18 வயதை எட்டிய ஒரு நபர் 200 யுரோ வவுச்சரை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வவுச்சர் மூலமாக இவர்கள் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கும், பட மாளிகைக்கு செல்வதற்கும் அல்லது சில காட்சிகளை பார்ப்பதற்கு பயன்படுத்த முடியும் என்றும் தெரியவந்திருக்கின்றுது.
 என்பது  குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 11 மார்ச், 2023

அகதி அந்தஸ்தை பிரித்தானியாவில் கோரியுள்ள தமிழர்கள் ருவண்டாவுக்கு அனுப்பப்படும் அபாயம்

பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்தை கோரியுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட்டவர்கள் தாம் ருவண்டாவுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்குவதாக அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனவே அவர்கள் பிரித்தானியாவில் மறைந்து வாழும் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று 
தெரிவித்துள்ளது. 
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பிரித்தானியாவுக்கு வந்த ஒருவர், தாம்  உள்துறை அலுவலகத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்றும்  அங்கு செல்வதனால் தமது வாழ்க்கையை  பணயம் வைக்க விரும்பவில்லை என்றும் 
குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அதிகாரிகள் தம்மை  வைத்து ருவாண்டாவிற்கு அனுப்பலாம் என்று அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
21 வயதான அபிந்தன் என்பவர் இலங்கையில் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகிய நிலையில் தாம் பிரித்தானியாவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
தனது உயிரைப் பணயம் வைத்து சிறு படகின் மூலம் தாம் பயணம் அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இந்த கருத்தை, தம்மிடம் தெரிவித்துக்கொண்டிருக்கும்போதே, பிரித்தானியாவின் அதிகாரமிக்க அதிகாரிகளின் கண்களில் தாம் தெரிந்துவிடக்கூடாது என்பதில் விழிப்பாக இருந்ததாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 
தாம் பதற்றமாக இருப்பதாகவும்,  காவல்துறையினர் இருந்தால்  அந்த வழியால் தாம் செல்வதில்லை என்றும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
அவரும் தாம் ருவண்டாவுக்கு அனுப்பப்படலாம் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார்.
கனகசபாபதி என்பவர், இலங்கையில் இடம்பெற்ற துன்புறுத்தல்கள் காரணமாக பிரித்தானியாவுக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த மூவரும் தங்களுடைய கோரிக்கைகள் செயல்படுத்தப்படும் வரை காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக பிரித்தானிய உள்துறை அலுவலகத்தால் வழங்கப்படும் தங்குமிடத்தை  புறக்கணித்துள்ளனர், 
அத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக,   தோட்டம் மற்றும் பராமரிப்பு வேலைகளை அவர்கள் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள், நாட்டின் வரிக்கு உட்படாமையால், அவற்றை, பொக்கட்  மணி என்று  அவர்கள் அழைப்பதாக பிரித்தானிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






வியாழன், 2 பிப்ரவரி, 2023

பிலிப்ஸ் நிறுவனம்லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது

டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ் அதன் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 6000 பணிகளை அகற்றுவதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் சந்தை மதிப்பில் 70% வீழ்ச்சி அடைந்த சுவாச சாதனங்களை திரும்ப பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் 6 ஆயிரம் பணிகளில் பாதி வேலைகள் இந்த வருடம் குறைக்கப்படும் எனவும் மீதமுள்ள வேலைகள் 2025 ஆம் வருடத்திற்குள் குறைக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. 
அதேபோல் புதிய மறு சீரமைப்பு கடந்த அக்டோபர் மாதம் அதன் பணியாளர்களை 5% அல்லது 4000 வேலைகளை குறைப்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் வருவதாகவும் கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



ஞாயிறு, 29 ஜனவரி, 2023

உலக கோடிஸ்வரரான எலான் மஸ்க்மேலும் ஒரு நிறுவனத்தை வாங்க உள்ளார்

எலான் மஸ்க் ட்விட்டரை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்தையும் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் தற்போது ஆறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். இந்த பில்லியனர் வாங்கிய சமீபத்திய நிறுவனம் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் ஆகும். கடந்த ஆண்டு அக்டோபரில் மஸ்க் ட்விட்டரை $ 44 பில்லியனுக்கு வாங்கினார். அதன் பிறகு அவர் ஒரு லாபகரமான வணிகத்தை உருவாக்க அல்லது அவர் விரும்பும் பல கடுமையான மாற்றங்களைக்
 கொண்டு வந்தார்.
Twitter 2.0. என்ற பெயரில் மஸ்க் ட்விட்டரை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்தை வாங்குவதற்கும், இந்த முறை கார்ப்பரேட் மீடியாவைப் பெறுவதற்கும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
வால் ஸ்ட்ரீட் சில்வர் என்ற Twitter பயனருக்கு மஸ்க் அளித்த சமீபத்திய பதில்களில், சந்தா செய்தி மடல்களை ஆதரிக்க, வெளியீடு, பணம் செலுத்துதல், பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு உள்கட்டமைப்பை வழங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் தளமான Substack ஐ வாங்கும் யோசனைக்குத் தான் தயாராக இருப்பதாகக் 
கூறியுள்ளார்.
2017 இல் நிறுவப்பட்ட இந்த ஆன்லைன் தளம் எழுத்தாளர்கள் டிஜிட்டல் செய்தி மடல்களை நேரடியாகச் சந்தாதாரர்களுக்கு அனுப்ப 
அனுமதிக்கிறது.
"Twitter plus Substack பெருநிறுவன ஊடகங்களுக்கு உடனடியாக பெரும் போட்டியை உருவாக்குகிறது" என்று ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு புறம் இப்போது, மஸ்க் சப்ஸ்டாக்கை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என விமர்சிக்கப்படுகின்றது.
ஏனெனில் அவர் ட்விட்டரை $44 பில்லியனுக்கு வாங்கினார். Tesla, SpaceX, The Boring Company, Neuralink, Twitter மற்றும் OpenAI உட்பட கிட்டத்தட்ட 6 நிறுவனங்களை மஸ்க் தற்போது வைத்திருக்கிறார். அவர் SpaceX இன் நிறுவனர், CEO மற்றும் தலைமை பொறியாளர், டெஸ்லாவில் CEO மற்றும் தயாரிப்பு கட்டிடக் கலைஞர், ட்விட்டரின் உரிமையாளர் மற்றும் CEO, The Boring Company இன் நிறுவனர், Neuralink மற்றும் OpenAI இன் 
இணை நிறுவனர்.
இதற்கிடையில், மஸ்க் ட்விட்டருக்கான புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடுகிறார். இருப்பினும் அடுத்த ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியின் கைகளில் நேரடி அதிகாரத்தை வழங்க அவர் 
தயாராக இல்லை. ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்க யாரையாவது தேடுவதாக அவர் சமீபத்தில் கூறினார். 
ஆனால் மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்கள் அவரால் கவனிக்கப்படும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 19 டிசம்பர், 2022

பெர்லினின் மையப்பகுதியில் 1500 உயிர்கள் துடிதுடித்து உயிரிழப்பு.

ஜெர்மனியில் பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து சாலையில் நீர் சாலையில் ஓடியது. ஆயிரக்கணக்கான அரிய வகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தன.ஐரோப்பிய நாடான ஜெர்மன் தலைநகர் பெர்லினின் மையப்பகுதியில், ‘ராடிசன் ப்ளூ’ என்ற பிரபல ஹோட்டல்
 அமைந்துள்ளது.
இங்கு, 82 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மீன் தொட்டி உள்ளது. , இதில் 1,500 வகையான மீன்கள் வளர்க்கப்பட்டன.‘அக்வாடோம்’ என பெயரிடப்பட்ட இந்த தொட்டியில் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த தொட்டி நேற்று அதிகாலை 6:00 மணிக்கு திடீரென
 உடைந்து சிதறியது.
வெப்பநிலை மைனஸ் 10 டிகிரிக்கும் குறைவாக சென்றதால் கண்ணாடி தொட்டியில் விரிசல் ஏற்பட்டு உடைந்ததாக கூறப்படுகிறது. மீன் தொட்டியிலிருந்து வெளியேறிய நீர், சாலையில் ஓடியது. இதில் இருந்த அரிய வகை மீன்களும் தரையில் விழுந்து 
துடிதுடித்து இறந்தன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 9 டிசம்பர், 2022

அஸர்பைஜான் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 இலங்கையர்களும் நிறுவன உரிமையாளரும் கைது

அஸர்பைஜான் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 பேரையும், கடத்தலுக்கு தலைமை தாங்கிய கஹதுடுவ பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரையும் கைது செய்ததாக கஹதுடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அஸர்பைஜான் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறு கஹதுடுவ பிரகதி மாவத்தை பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, விமான நிலையத்திற்குச் சென்ற போது விசா இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பியதாக வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த மோசடி நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் செல்வதற்காக தான் 8 லட்சம் ரூபாயை வேலைவாய்ப்பு முகவருக்கு கொடுத்ததாக குறித்த நபர் தனது முறைப்பாட்டில் 
குறிப்பிட்டுள்ளார்.
இவருடன் மேலும் 6 பேர் விமான நிலையத்திற்கு சென்ற போதிலும் அவர்களும் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த நபர் செய்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறிது நேரத்தில் மேலும் 6 பேர் காவல்துறை நிலையத்திற்கு தாம் கஹதுடுவ வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 62 லட்சம் ரூபாய் வழங்கியதாக 
குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த போதும், வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளரால் தாம் விமான நிலையத்திற்குள் மாத்திரம் அழைத்துச் செல்லப்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் தங்கள் முறைப்பாட்டில்
 தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 29 நவம்பர், 2022

புகலிடக்கோரிக்கையாளர்களை வெளியேற்ற பிரித்தானியா வெள்ளை பட்டியல்

பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகளிலிருந்து வந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றுவதை விரைவுபடுத்த ரிஷி சுனக் அரசு திட்டமிட்டுவருகிறது.
பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகள் கொண்ட 
வெள்ளைப் பட்டியல் ஒன்றை உருவாக்க பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் விரும்புவதாக கூறப்படுகிறது.
அதாவது, ஒரு நாட்டில் போர், பஞ்சம், அரசியல் 
பிரச்சினைகள் போன்ற காரணங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், அந்த நாட்டிலிருந்து படகு மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோர்
 இருக்கிறார்கள். தன் நாட்டில் வாழ்வதைவிட நன்றாக வாழ்வதற்காக அவர்கள் பிரித்தானியாவுக்கு வருகிறார்கள். அவர்களை அவர்கள்
 நாட்டுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்பதுதான் பிரித்தானியாவின் திட்டம்.
ஆக, அப்படிப்பட்ட பாதுகாப்பான நாடுகள் கொண்ட பட்டியல்தான் ‘வெள்ளைப் பட்டியல் என இங்கு குறிப்பிடப்படுகிறது.
புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பத் திட்டம்அப்படிப்பட்ட நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்புவதுதான் திட்டம்.
இன்னொரு விடயம், இப்படி திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை நிரூபிக்க முடியாத பட்சத்தில், அதை எதிர்த்து மேல் முறையீடும் செய்யமுடியாத வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 12 செப்டம்பர், 2022

ஒரு நகரம், உலகிலேயே முதல் தடவையாக பொதுவெளிகளில் இறைச்சி விளம்பரங்கள் செய்வதற்கு தடை

நெதர்லாந்து நாட்டில் இருக்கும் ஒரு நகரம், உலகிலேயே முதல் தடவையாக பொதுவெளிகளில் இறைச்சி குறித்த விளம்பரங்கள் செய்வதற்கு தடை அறிவித்திருக்கிறது.
நெதர்லாந்து நாட்டின் ஹார்லெம் என்னும் டச்சு நகர், பருவநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் இறைச்சிக்காக பொதுவெளிகளில் விளம்பரம் செய்யப்படுவதற்கு தடை அறிவித்திருக்கிறது. 
உலகிலேயே இறைச்சி விளம்பரம் செய்வதற்கு தடை விதித்த முதல் நகரமாக ஹார்லெம் மாறவிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
அதன்படி, 1,60,000 பேர் வாழும் அந்த நகரில் வரும் 2024 ஆம் வருடத்திலிருந்து திரையரங்குகள், பேருந்துகள் முதலான பொதுவெளிகளில், தீவிர முறை பண்ணை வளர்ப்பு இறைச்சிக்கான விளம்பரங்கள் 
செய்யக்கூடாது 
என்றும் அது சட்டவிரோதமானது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவெளிகளில் மோசமான இறைச்சி குறித்து விளம்பரங்கள் செய்வதை அந்நகரம் தடை செய்திருக்கிறது. அதே நேரத்தில் இயற்கையான இறைச்சிகளுக்கு செய்யப்படும் விளம்பரங்களுக்கும் தடை இருக்குமா? என்பது குறித்து அந்நகரம் தற்போது வரை தீர்மானிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





திங்கள், 25 ஜூலை, 2022

நாட்டிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து

நாட்டிலிருந்து லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் சில விமானங்களை தொடர்ந்தும் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 
அறிவித்துள்ளது.
 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

விமான நிலையத்தில் பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து லண்டனுக்கான இரண்டு விமானங்களும், லண்டனிலிருந்து கொழும்புக்கான இரண்டு விமானங்களும் கடந்த மூன்று வாரங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாளாந்தம் லண்டனுக்கு ஒரு விமானம் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ரத்துகளின் விளைவாக, ரத்து செய்யப்பட்ட விமான பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாகவும், அவர்களுக்காக வேறு விமானங்களை தயார்படுத்தி வருவதாகவும் அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 1 ஜூலை, 2022

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் அமெரிக்காவில் சாதனை

அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸ் தொகுதியில் ஜனநாயகக் கட்சியின் பிரைமரியில் வெற்றி 
பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளி அமெரிக்க காங்கிரஸின் ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸில் இருந்து ஜனநாயகக் கட்சியின் பிரைமரியில் ஒரு தீர்க்கமான ஆணையை வென்றார், அவரது எதிர் வேட்பாளரான அகமது நடத்திய பிரசாரத்தை வெற்றிகரமாக முறியடித்தார்.
இல்லினாய்ஸின் எட்டாவது காங்கிரஸ் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கிருஷ்ணமூர்த்தி (48), ஜுனைத் அகமதுவை (71) சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் தோற்கடித்தார்.
இந்நிலையில் “எனது தொகுதி மக்கள் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பை விரும்புகிறார்கள். காங்கிரசில், நான் நடுத்தர வர்க்கத்தினருக்காகவும், பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்காகவும், பணவீக்கம் மற்றும் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகவும் இருக்கிறேன். வரும் முக்கியமான மாதங்களில் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க நான் தொடர்ந்து அயராது உழைப்பேன்” 
என்று கூறினார். 
அவர் 2017 முதல் இல்லினாய்ஸின் 8-வது காங்கிரஸ் மாவட்டத்திற்கான அமெரிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். புது டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை ராஜபாளையம். தாயார் தஞ்சாவூர். இவருடைய மனைவியும் தமிழ்நாடு தான். இவருடைய தந்தைக்கு அமெரிக்காவில் பேராசிரியர் பணி கிடைக்க,
 அங்கு சென்றனர்.
பின்னர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். மருத்துவமனை பொறுப்பாளராக இருந்த போது ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜா கிருஷ்ணமூர்த்தி 2004-ஆம் ஆண்டு ஒபாமாவின் செனட் பிரசார ஆலோசகராக பணியாற்றினார்.
2008-ல் ஒபாமாவின் தனி ஆலோசகராக இருந்தார். 2007 – 2009 காலகட்டத்தில் இல்லினாய்ஸ் மாகாணத்தின் துணை நிதியமைச்சராக இருந்தார்.
அவர், வரும் நவம்பர் 8-ஆம் திகதி பொதுத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் கிறிஸ் டர்கிஸை எதிர்கொள்கிறார். கடந்த மாதம்,
 அவரது சிறந்த தொழில் மற்றும் பொது சேவைக்கான அர்ப்பணிப்பை பாராட்டி அவருக்கு சிறப்புமிக்க தலைமைத்துவ விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>